மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்டால் அவரினால் வெற்றிபெற முடியாது



தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரினால் வெற்றிபெற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நேற்று (08) தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாகவும் மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலை கூட வைக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துவிட்டு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மக்களுக்கு நன்கு சிந்திக்கும் திறன் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.