விபத்தில் 26 வயது இளைஞன் சம்பவ இடத்தில் பலி


(செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு; செங்கலடி கொடுவாமடு பிரதேசத்தில், செங்கலடி பதுளை பிரதான வீதியில் இன்று காலை 06.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 26 வயதுடைய செங்கலடி அம்மன்புரத்தைச் சேர்ந்த மதிஅழகன் மோகன்ராஜ் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

செங்கலடியில் இருந்து கித்துள் நோக்கி பயணித்த மோட்டார் வாகணமும் இலுப்பையடிச்சேனையில் இருந்து செங்கலடி நோக்கி ஆற்றுமண்; ஏற்றி பயணித்த கனரக டிப்பர் வாகணமுமே நேருக்கு நேர் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிலில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிளந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிகவிசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.