மண்டூர் 40 அ.த.க. பாடசாலை மாணவிகளால் "கர்ணன் போர்" நாட்டுக் கூத்து அரங்கேற்றம். (போட்டோ)

  (பழுவூரான்)
மட்டக்களப்பு படுவான்கரையிலே எல்லைப்புற பாடசாலையான மட்/மண்டூர் 40 அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 11.10 மாணவிகளால் "கர்ணன் போர்" எனும் நாட்டுக்கூத்து நாற்பதாம் கிராமம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.


பாடசாலையின் உபஅதிபரும், நாடக அரங்கியல் பாட ஆசிரியருமான ஆ.நித்தியானந்தம் அவர்களின் ஆலோசனையின் கீழ், கோவிலூர் க.தணிகாசலம் அவர்களின் நெறியாள்கை, வழிகாட்டலின் கீழ், பாக்கியராசா அண்ணாவியரின் உதவியுடனும் இக்கூத்து 10.07.2014 அன்று அரங்கேற்றப்பட்டது.


  • கட்டியக்காரன் - வி.கோசனா
  • கர்ணன்               - தி.சுமத்திரா
  • துரியோதனன் - தே.கஜானி
  • பொன்னுருவி - து.சிந்து
  • தோழி                 - உ.தர்சினி
  • தருமர்                - ம.பிறேமிலா
  • வீமன்                 - அ.அனுசியா
  • அருச்சுணன்   - தே.திவ்வியானா
  • சல்லியன்        - கு.தினேஜினி
  • குந்திதேவி      - க.டிசாந்தினி
  • கிருஷ்ணர்      - இ.அமலா
  • பிராமணர்       - த.வாண்மதி
ஆகியோர் பாத்திரமேற்று .நடித்தார்கள்.