மட்டக்களப்பு நாற்பதாம் கிராம முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகர தோரணச் சடங்கு


                                                                                                             (பழுவூரான்)

மட்டக்களப்பு படுவான்கரையிலே அமைந்து நாடிவரும் பக்தர்களுக்கு அருளாட்சி வழங்கும் நாற்பதாம் கிராம ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 06.07.2014 அன்று ஆரம்பமாகி 4ம் நாள் மகர தோரணச் சடங்கு இடம்பெற்றது. இவ்வூரிலே நான்கு
வட்டாரங்கள் உள்ளன. இவ்வட்டாரங்களில் இருந்து தோரணங்களை அழகுபடுத்தி பாண்டு வாத்தியம் முழங்க வாணவேடிக்கைகளுடனும்  ஆலயத்தை வந்தடைந்தது.