தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய 14ம் நாள் திருவிழா -2014

(ச.புகழ்)
கிழக்கிலங்கையின்  சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 20.07.2014 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  நேற்று அதாவது 02.08.2014 திகதி 40ம் கிராமம், திக்கோடை, பனிச்சையடிமுன்மாரி, மாவடிமுன்மாரி மக்களின் திருவிழாவானது மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது. அத்துடன் 40ம் கிராம மக்களினால் 40ம் கிராமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து மகர தோரணம் எடுத்து செல்லப்பட்டு   மலையில் வீற்றிருக்கும் விநாயகருக்கு அலங்கரிக்கப்பட்டது. இத்திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எட்டுத்திக்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.