மட்டக்களப்பு செங்கலடி மண்ணை வளப்படுத்த வளமூட்டிய சாதனைச் சிகரங்களின் பொன்னிய சேவையை பாராட்டும் முகமாக சீனித்தம்பி போடியார் சாதனையார் விருது வழங்கல் மற்றும் விஞ்ஞான் பொது வினா விடைகள் நூல் வெளியிட்டும் நிகழ்வு சீனித்தம்பி போடியார் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
சீனித்தம்பி போடியாரின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதேசத்தில் பலவேறு துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்து இலைமறைகாய்களாக காணப்பட்ட பெருமைக்குரியர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் முகமாக சீனித்தம்பி போடியார் குடும்பத்தினர் அமரா கல்லூரியுடன் இணைந்து சாதனையார் கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த மனிதாபிமானம் உள்ள வைத்தியரான தங்கராசா சுத்தானந்தம், சிறந்த கல்வி நிர்வாகியான திருமதி பரமேஸ்வரி இளங்கோ, சிறந்த அதிபரான தோலிப்போடி சீவரெத்தினம், சிறந்த சமுக ஆர்வலரான பொன்னுத்துரை சாம்பசிவம், சிறந்த மாணவ வளவாளருக்கான அதிபரான திருமதி தங்கநாயகி பாலசுப்பரமணியம் சிறந்த முகாமைத்துவத்திற்கான அதிபரான வடிவேல் கந்தசாமி சிறந்த பிரதேச நிருவாகியான உருத்திரன் உதயஸ்ரீதர், சிறந்த மாணவ எழுச்சியாளரான எஸ்.எஸ். அமல் மற்றும் இளம் ஊடகவியலாளர் பேரின்பராஜா சபேஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் எழுதிய விஞ்ஞான் பொது வினா விடைகள் நூல் வெளயீட்டுவைக்கப்பட்டதுடன் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் சிறந்த பொறுபோறு பெற்ற மாணவி மற்றும் அமரா கல்லூரியில் விஞ்ஞான போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
சீனித்தம்பி போடியாரின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதேசத்தில் பலவேறு துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்து இலைமறைகாய்களாக காணப்பட்ட பெருமைக்குரியர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் முகமாக சீனித்தம்பி போடியார் குடும்பத்தினர் அமரா கல்லூரியுடன் இணைந்து சாதனையார் கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த மனிதாபிமானம் உள்ள வைத்தியரான தங்கராசா சுத்தானந்தம், சிறந்த கல்வி நிர்வாகியான திருமதி பரமேஸ்வரி இளங்கோ, சிறந்த அதிபரான தோலிப்போடி சீவரெத்தினம், சிறந்த சமுக ஆர்வலரான பொன்னுத்துரை சாம்பசிவம், சிறந்த மாணவ வளவாளருக்கான அதிபரான திருமதி தங்கநாயகி பாலசுப்பரமணியம் சிறந்த முகாமைத்துவத்திற்கான அதிபரான வடிவேல் கந்தசாமி சிறந்த பிரதேச நிருவாகியான உருத்திரன் உதயஸ்ரீதர், சிறந்த மாணவ எழுச்சியாளரான எஸ்.எஸ். அமல் மற்றும் இளம் ஊடகவியலாளர் பேரின்பராஜா சபேஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் எழுதிய விஞ்ஞான் பொது வினா விடைகள் நூல் வெளயீட்டுவைக்கப்பட்டதுடன் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் சிறந்த பொறுபோறு பெற்ற மாணவி மற்றும் அமரா கல்லூரியில் விஞ்ஞான போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.