செங்கலடியில் பாம்பவுண்டேசன் நிறுவனத்தினால் வெள்ள மீட்சிக்கான செயற்திட்டம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது!

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பாம்பவுண்டேசன் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வெள்ள மீட்சிக்கான செயற்திட்டம் பற்றி அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று(07) காலை 10 மணியளவில் நடைபெற்ற இன் நிகழ்வில் பாம்பவுண்டேசன் நிறுவனத்தின் 215ம் ஆண்டுக்கான வெள்ள மீட்சிக்கான செயற்திட்டத்தினை பாம்பவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர்களான எஸ்.பன்னீர்ச்செல்வம், அ.சக்தி ஆகியோர் திட்டம் பற்றி அறிமுகம் செய்து வைத்தனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான இச் செயற்திட்டமானது செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி-04, கொம்மாதுறை வடக்கு, கொம்மாதுறை கிழக்கு, கொம்மாதுறை மேற்கு, செங்கலடி-01, செங்கலடி-02,ஐயன்கேணி, குமாரவேலியார் கிராமம்,மயிலம்பாவெளி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச் செயற்திட்டத்தின் மூலம் 1000 குடும்பங்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கள், சுகாதாரத்தை மேன்படுத்துவதற்காக 1600 குடும்பங்களுக்கான கிணறுகளை சுத்தம் செய்தல், 100 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அனர்த்த குறைப்புக்கான வடிகான் அமைத்தல், போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இச் செயற்திட்டத்தின் ஊடாக 09 கிராமங்களைச் சேர்ந்த 3200 குடும்பத்தினர் பயன் அடையவுள்ளதுடன் சுமார் 12832 பேர் இச் செயற்திட்டத்தின் ஊடாக நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தள்ளனர்.

இந்நிகழ்வில் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர், ஏறாவூர் பற்று பிரதேச உதவிச் செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், சுகாதார மேம்படுத்தல் உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.