நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியிலேயே குழந்தை வீழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.