![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9hiOIXBbva48qZg3PrboXQLtmmSZAdvLcGTfICXO4cfyb8A1Ph4Jmej2Lmw-8dW_sIJBOGYMMWzpGB0lT4CmCubUR9UTNICfpeFv8W77iqTuSzhJ2R0HrM54QyEfsvCoBlCv_jG2JpjNX3_hZpEQRtnLhucQMW1n6fhYry5rBE9T9tDj9L3kC20-qMx4/s16000/423422606_950175236690747_689702670681525664_n.png)
திருகோணமலை இந்துக் கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தனுஸ்கோடி முதல் தலை மன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
9மணித்தியாலம் 37நிமிடம் 54 செக்கனில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.