வாகரை காயங்கேனி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு


வாகரை – காயங்கேனி கடற்கரையில் நேற்று(15) இரவு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர் சில நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.