செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்யாதவர் தான் இளஞ்செழியன் - அர்ச்சுனா MP


செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழியன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது எப்படி மழைக் காலங்களில் நீங்கள் செம்மணியை மூடி வைத்துள்ளீர்களோ அதே செம்மணியை இளஞ்செழியனும் மண் போட்டு மூடியுள்ளார். நான் அரசியலுக்கு வந்து தற்போது தான் அந்த விடயம் எனக்குத் தெரியும், மிகப்பெரிய கவலையுடன் அதை நான் பதிவு செய்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.