இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.













(சித்தா)
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தினால் பீடத்தினால் சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி 20 நவம்பர் 2025 இறுதித் திகதி 20 டிசம்பர் 2025 ஆகும். இக் கற்கைநெறியானது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுடன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் உள்ளடங்கியதாக நாடு முழுவதிலும் உள்ள ஒன்பது பிராந்திய நிலையங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும்.

இக் கற்கைநெறிக்கான நுழைவுப் பரீட்சை எதிர்வரும் 08 பெப்ரவரி 2026 நடைபெறவுள்ளது. நிகழ்நிலை மூலம் விண்ணப்பித்தல் வேண்டும் https://reginfo.ou.ac.lk/applyonline / மேலும் bit.ly/4eEszfQ என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நிகழ்ச்சித் திட்ட தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய தகவற் தொகுப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.