இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை


இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் 'அவதானத்துடன் இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (04) மாலை 5.00 மணி முதல் நாளை மாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.