தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து ; 08 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயம்.


 துன்ஹேன பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி. கே. ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், 8 வயது டைய சிறுவன் ஒருவரும் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கெப் வாகனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பிட்டிகல பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டியுடன், பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.