
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் 22 பசுக்களை லொறியில் ஏற்றிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது, பசு ஒன்று உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.






.jpeg)





