உகந்தை ஆலய சுற்றுச் சூழலை தூய்மையாக்கும் பணியில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்

(சித்தா) 
எதிர்வரும் கதிர்காம வருடாந்த உற்சவ காலத்தை முன்னிட்டு காட்டுப் பாதை பக்தர்களின் நன்மைகருதி உகந்தை ஆலய சுற்றுச் சூழலை தூய்மையாக்கும்  பணிகளை திருக்கோவில் பிராந்திய கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகதர்கள் இரண்டாவது நாளாகவும் (19.06.2026, 20.602026) செம்மையாக ஒன்றிணைந்து வழமைபோன்று இவ்வாண்டும் மேற்கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.சுஜிதரனும் இணைந்து கொண்டு உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்தினார்.