மங்களராமய விகாராதிபதியால் பட்டிபளையில் மீண்டும் பதற்றம்

பட்டிப்பளை பிரதேச செயலாளரை அச்சுறுத்திய மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தமையால் இப்பிரதேசத்தில் இன்றும் பதற்றம் ஏற்பட்டது.
 
பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரரை மீண்டும் செல்ல விடாது தடுக்கும் வகையில் பொது மக்கள் வீதியை மறித்து ரயர்கள் எரித்து தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளனர்.
 
இதனையடுத்து பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி கடும் பாதுகாப்புடன் மண்முனை வரை கொண்டு சென்று பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.