டிஜிட்டல் யுகத்தில் சமூகஊடகங்கள் தொடர்பாடலின் அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. அதன் மூலம் தனிநபர்கள் முன்பில்லாத அளவிற்கு சமூக ஊடகங்களின் விழியாக (Face book, Instagram TikTok, X jsk;> kw;Wk; Youtube) உள்ளடக்கங்களை உருவாக்கவும் பகிரவும் மற்றும் அதனுடன் தொடர்பு கொள்ளவும் முடிகின்றது. இந்த சுறுசுறுப்பான டிஜிட்டல் சூழலில் உள்ளடக்க உருவாக்குனர்கள் (Content creators) முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த சமூக ஊடகங்களின் வாயிலாக பல சாதகமான விளைவுகள் காணப்பட்டாலும் இதன் வேகமான வளர்ச்சி பல சவால்களையும் உருவாக்கியுள்ளது. இதன் பின்னணியில் 2024ம் ஆண்டின் 9ம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியது. அச்சட்டம் நிகழ்நிலை (Online) தொடர்பாடல்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும், டிஜிட்டல் தளங்களின் தவறான பயன்பாட்டை குறைப்பதற்கும், தனிநபர் உரிமையைப் பாதுகாப்பதற்கும், மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்குமான குறிக்கோள்களைக் கொண்ட ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குகின்றது.
அத்துடன் இச்சட்டம்; பின்வரும் முக்கிய விதிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவையாவன: நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவின் நிறுவல், தீங்கிழைக்கும் நிகழ்நிலை தொடர்பாடலுக்குத் (தடை செய்யப்பட்ட அறிக்கைகள்), இணையத் தளங்கள் மற்றும் கணக்குகளின் ஒழுங்கு முறை, இணையக் குற்றங்கள், தொந்தரவுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட இணையத் தளங்களை கட்டுப்படுத்தல், மற்றும் போலி மற்றும் செயற்கைக் கணக்குகளை இனங்காணல், குழந்தைகள் பாதுகாப்பு நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு. மேலும் இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களுக்கு குறிப்பிடத்தக்களவான சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது.
இச்சட்டத்தின் பலங்களாக விரிவான வரம்பு, தடுப்பு நோக்கு பலவீனக் குழுக்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம். மாறிவரும் இவ்வுலகில் முக்கிய இடம் பிடித்துள்ள டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மீதான இச்சட்டத்தின் தாக்கம் பற்றியும் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யவும், விளம்பரப்படுத்தவும் இணையத் தளங்கள் ( Websites), செயலிகள் (Apps), தொலைபேசி சாதனங்கள் (Mobile devices), சமூக (Social Medias), (தேடு பொறிகள் Search – Engines) மற்றும் பிறடிஜிட்டல் ஊடகங்களை பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் முறையாகும்.
டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் மீது இச்சட்டத்தின் அனுகூலமான விளைவுகளாவன: தவறான தகவல் பரவனையைக்; குறைத்தல், வியாபாரக்குறி (Brand) பாதுகாப்பு மேம்பாடு நுகர்வு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அதிகரிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனினும் சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என தொழிற்துறை நிபுணர்கள் கருதுகின்றனர் அவையாவன: சமூக ஊடக சந்தைப்படுத்தல் செயற்பாடுகளில் குறைவு, சுயதணிக்கை அதிகரிப்பு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் வேலைவாய்ப்புக்கள் குறைவு, டிஜிட்டல் விளம்பர முதலீட்டில் குறைவு, வெளிநாட்டு வருமானத்திற்கான பாதிப்பு, சமூக ஊடக நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுதல், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைகள், சர்வதேச தொழிநுட்ப நிறுவனங்களின் செயற்பாடுகளில் மாற்றம், IT BPO (Information Technology – Business Process Outsoaring) துறையின் ஏற்றுமதிக்கு ஏற்படும் தாக்கம் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில் முனைவோருக்கான பாதிப்பு, அத்துடன் தகவல் ஓட்டத்தில் கட்டுப்பாடு, அவ்வகையான வரையறைகள் காணப்பட்டமையினால் இச்சட்டம் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை நிபுணர்கள் திருத்தங்களுக்கான முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாவன: சட்டத்தை மறு பரிசீலனை செய்து ரத்துச் செய்தல் அல்லது முழுமையான திருத்தம் மேற் கொள்ளல், தெளிவான மற்றும் துல்லியமான சட்டவரையறைகள், சுயாதீனமான அமைப்பை நிறுவுதல், சமச்சீரான மற்றும் தேவையான அளவிலான கட;டுப்பாடுகள், தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான நடைமுறை போன்றவையாகும்.
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டமையும் அவற்றின் பரிந்துரைகளும் சமநிலையான அமுலாக்கம், நம்பகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உருவாக்குவதினூடாக வலுவான சட்டக் கட்டமைப்பாக அமையுமெனில் மென்மேலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் எனலாம்.
செல்வி எ.ருக்ஷிகா
முகாமைத்துவ பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்


.jpeg)




.jpeg)





.jpeg)