
நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் நீரில் ழூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறையில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpeg)



