பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது


கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியில் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 6 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.