நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோல்வி


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
 
இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அமைச்சர் தவறியதன் காரணமாக, அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.