Friday, May 24, 2013
ஆலயத்தில் வழங்கப்பட்ட கடலையை உட்கொண்ட சுமார் 33 பேர் மயக்கம்
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (24 வெள்ளி ) காலை திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு பூரணை பூசையில் கலந்து கொண்டோருக்கு அங்கு வழங்கப்பட்ட பிரசாதம் (கடலை) ஒவ்வாமை காரணமாக பலர் திடிர் சுகயினமுற்ற நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகீச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ் கடலையை உட்கொண்ட சுமார் 33 பேர் இவ்வாறு மயக்கம், வாந்தி போன்ற திடிர் சுகயினமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகீச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு சிறுமி மட்டும் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் மாவட்ட வைத்திய அதிகாரி எம். தமிழ்தாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில் 12 சிறுவர்களும், 12 பெண்களும்,09 ஆண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது சம்மந்தமான விசாரனைகளை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரும்,இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலயத்தில் கடலை உண்ட 33 பேர் சுகயீனம் உற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
திருக்கோவில் பிரதேசத்தில் ஆலயம் ஒன்றில் பூஜையின் பின்னர் வழங்கப்பட்ட கடலையை உண்ட பக்தர்கள் 33 பேர் சுகயீனம் உற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதையடுத்து பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது
இப் பிரதேசத்தில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் இன்று காலை 6.00 மணிக்கு ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் பின்னர் கடலை வழங்கப்பட்டுள்ளது இதனை ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் வாங்கி உண்ட நிலையில் காலை 7.00 மணியளவில் இவர்களுக்கு வாந்தி மற்றும் தலைச்சுற்று, வயிற்றுளைவு மயக்கம் போன்றவை ஏற்பட்டதையடுத்து உடனடியாக திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலையில் அவசர சிகிச்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில் 12 சிறுவர்கள், 12 பெண்கள் ,9 ஆண்கள் உட்பட 33 பேரை அனுமதிக்கப்பட்டுசிகிச்சை இடம்பெற்று வருகின்றனர் இதில் 3 வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனவும் இவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் பயப்பிடும் அளவிற்கு எதுவும் இல்லைஎனவும் வழங்கப்பட்ட கடலையை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலை பணிப்பாளர் எம் .தமிழ்தாசன் தெரிவித்தார்
இதேவேளை வைத்தியசாலைக்கு மக்கள்படை யெடுத்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ,பிரதேச சபைதவிசாளர் புவிர்தராஜன், ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று அனுமதிக்கப்ப ட்டவர்களை பார்வையிட்டுள்ளனர்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு புதிய கனரக இயந்திரம் வழங்கல்
(கிருஸ்ணா)
மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கனரக வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வவுணதீவில் குண்டு மீட்கப்படவில்லை - வவுணதீவு பொலிஸார்
வவுணதீவின் மண்ல்பிட்டி-குறிஞ்சாமுனை வீதியில் குண்டு மீட்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பிழையானது என தெரிவித்துள்ள பொலிஸார் அந்த செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Thursday, May 23, 2013
வவுணதீவில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
(கிருஸ்ணா,மா.சசி)
மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தச் சடங்கு விழா
மீன் பாடும் தேன்நாடாம் மட்டுமா நகரின் தெற்கே இருபது மைல் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமங்களுள் ஒன்று கோட்டைக்கல்லாறு ஆகும். இங்கு அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு விழா இம்மாதம் 18 ஆந் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. இத்திருவிழா எதிர்வரும் 24 ஆந் திகதி இரவு திருக்குளிர்த்தி ஆடும் நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.வாவியால் சூழப்பெற்றதும் நீர்வளமும், நில வளமும், கல்வி வளமும் அமையப் பெற்றதுமான இக்கிராமத்தில் ஆங்காங்கே ஆலயங்களும் அமையப்பெற்று மக்களின் வாழ்விற்கு ஆத்மீக பலம் வழங்கி வருகின்றன. இவ்வாறு உள்ள ஆலயங்களுள் பழமைவாய்ந்ததும் இக்கிராமத்தின் புராதன வரலாற்றினை வலியுறுத்தி வருவதுமான ஆலயங்களுள் ஒன்றாகஇந்த கண்ணகை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது.
இவ்வாலயத்தின் வருடாந்தச் சடங்கு விழா வருடந்தோறும் வைகாசி மாதத்தில் ஆரம்பித்து வைகாசிப் பௌர்ணமியில் திருக்குளிர்த்தி ஆடும் நிகழ்வுடன் நிறைவு பெறுவது வழமை. இவ்வாலயச் சடங்குகள் யாவும் ஒவ்வொரு குடியினராலும் நடத்தப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு சடங்கின் போதும் அக்குடியினரின் அடப்பனார்என அழைக்கப்படும் தலைவரது வீட்டிலிருந்து மடையெடுத்து வரும் நிகழ்வு இடம்பெறும் இது மிகவும் கோலாகலமான ஏற்பாடுகளுடன் ஊரைச்சுற்றி வரும் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு தினமும் பகல், இரவு என இரு சடங்குகள் இடம்பெறும் சடங்கின் போது உடுக்கை இசையில் கண்ணகையம்மன் காவியம் பாடப்படும் இப்பாடல் எமது நாட்டார் இசையின் இனிமையினை உணர்த்தி நிற்கும் .சடங்கு முடிவுற்றதும் கண்ணகி வழக்குரை பாடப்படும் மரபு இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
கண்ணகையம்மன் சடங்கு விழா இறுதியில் பெங்கல் பொங்கி குளிர்த்தி பாடி அம்மனையும் மனித மனங்களையும் மகிழ்வால் குளிரச் செய்யும் திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
(வயிரமணி நாகலிங்கம்)
மட்டக்களப்பில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பிலுள்ள சர்வதேச, உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக, தொண்டு நிறுவனங்களினுடைய ஒன்று கூடல் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு வாசிக சாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு நடைபெறும் இவ் ஒன்று கூடலை மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது
கலந்து கொள்ள விரும்புபவர்கள் இணையத்தின் தலைவருடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கம் 0777679596.
இக் கலந்துரையாடல் மாவட்டத்தின் அபிவிருத்திகள், சமகால் சமூகப் பாதுகாப்புப் போக்குகளும் ஆராயப்படவுள்ளன.
இதற்கான அனுசரணையை சரீரம் நிறுவனம், மனிதநேய முகவர் அமைப்புகளின் ஒன்றியமும் வழங்குகின்றன.
Read more
இரட்டை படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்
செங்கலடி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இரட்டை படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் மே 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் நீதிபதியின் மனைவியின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னாள் நீதிவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு
(கிருஸ்ணா)
பிரான்சை தளமாகக்கொண்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த புலம்பெயர் மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறுமைநிலையில் உள்ள பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
Read more
பிரான்சை தளமாகக்கொண்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த புலம்பெயர் மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறுமைநிலையில் உள்ள பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஹக்கீம் கலந்துகொள்ளும் இலவச குடிநீர் இணைப்பு நிகழ்வினை த.தே.கூ பகிஷ்கரிப்பு !
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை கல்முனை மாநகர சபை இன்று வழங்கவுள்ளது. இதில் தமிழ் மக்கள் மிக குறைந்தளவானவர்களுக்கே இவ்விணைப்பு வழங்கப்படவுள்ளதைக் கண்டித்தே கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் நிகழ்வை பகிஸ்கரிப்பதாக மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம் தமிழ் விகிதம் 3:1 என்ற ரீதியில் பகிர்ந்தளித்திருக்கப்பட வேண்டும் என்றும், 9 தமிழ் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படுவது நீதியான செயற்பாடு இல்லை என்றும், இது தொடர்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்க்கு கொண்டுவந்த போதும் பயன் ஏதும் கிட்டவில்லை. இதனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை கிழக்கு மாகாண முதலமைச்சர் தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டு.வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற விவேகானந்தா மகாவித்தியாலய மாணவிகளுக்கு கௌரவம்
மட்டக்களப்பு கல்வி வலயம் நடத்தியம் அண்மையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடத்திய வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கல்லடி,விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது.
மட்டக்களப்பில் படையினரால் முதன்முதலாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
Wednesday, May 22, 2013
இணக்க சபையின் அமைதிக்கு பங்கம் விளைவித்த 04 பேர் கைது
(கிருஸ்ணா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை இணக்க சபையின் அமைதிக்கு பங்கம் விளைவித்த 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் நகர சபையில் இடம் பெற்றுவரும் ஊழல் மோசடி –பகிரங்க விவாதத்துக்கு நகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.பெறோஸ் அழைப்பு
(கிருஸ்ணா )
ஏறாவூர் நகர சபையில் இடம் பெற்றுவரும் ஊழல் மோசடி சம்பந்தமாக பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு ஏறாவூர் நகர தலைவர் அலிசாஹீர் மௌலானாவுக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.பெறோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
உறுகாமம் முஸ்லிம்களுக்கு வீட்டுத்திட்டம் - அமைச்சர் பஸிலின் நிகழ்வில் துண்டுப்பிரசுரம்
மட்டக்களப்பு,செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட உறுகாமத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கலந்துகொண்ட இந்திய வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகிக்கப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி ஏ.ஜூட்சன் பிறப்பித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சவளக்கடை பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இந்த இளைஞர், தான் திருமணம் செய்வதாகவும் இதனை எவரிடமும் தெரியப்படுத்த வேண்டாமெனக் கூறி கடந்த 9 மாதங்களாக இந்தச் சிறுமியை ஏமாற்றி வந்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அன்றையதினமே இந்த இளைஞரை கைதுசெய்ததாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்
ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கமாக இருக்கின்றது.
சர்வதேசத்தின் தலையீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் தலையீட்டிலிருந்து விடுதலை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.
எனது சகோதரனையும் புலிகள் கொலை செய்தனர். அதற்காக நான் சர்வதேச விசாரணையை கோர முடியுமா? சர்வதேச தலையீடுகளால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டால் எமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மிக சிறந்த உதாரணமாகும்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வில்லையென்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்தது.
அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்படும் வரை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்தனர்.
ஆனால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டனர்.
தற்போது வட மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.
காலத்தின் தேவைக்கேற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்புக்குரியது.
அது போன்று சர்வதேச தலையீடு அவசியம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலிருந்தும் மாற வேண்டும். ஏனென்றால் எமது பிரச்சினைகள் நாம் பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
இராணுவ மயமாக்கலை குறைக்க முடியும்.
குரோத மனப்பான்மையை வளர்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் எம்மால் தீர்வுகளை காண முடியாது.
சம்பந்தன், மாவை ஆகியோரை எனது குருவாகவே கருதுகின்றேன். ஏனெனில் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தியவர்கள் அவர்கள். எனவே அவர்களை மதிக்கின்றேன்.
எனவே அரசுடன் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
சாய்ந்தமருது நூலக திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின்
தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை
உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்
உத்தரவிட்டுள்ளார்.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட விருக்கின்ற நூலகம் தொடர்பிலேயே மாகாண முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள எதிர்ப்பை அடுத்தே முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு தனி நபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டு 23.05.2013 வியாழக்கிழமை திறக்கப்படுவதாக மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி வாசிகசாலை திறப்பு விழாவையும் பெயர் சூட்டும் நடவடிக்கையையும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட விருக்கின்ற நூலகம் தொடர்பிலேயே மாகாண முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள எதிர்ப்பை அடுத்தே முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு தனி நபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டு 23.05.2013 வியாழக்கிழமை திறக்கப்படுவதாக மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி வாசிகசாலை திறப்பு விழாவையும் பெயர் சூட்டும் நடவடிக்கையையும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.
வாழைச்சேனை விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்
த.லோகதக்சன்
வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மட்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாடசாலையின் சிற்றூழியரான மார்க்கண்டு அகிலன் (வயது 30) என்பவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மட்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் வாழைச்சேனை இ.போ.சவுக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பாடசாலையின் ஆசிரியரான எஸ்.கோமராஜன் (வயது- 30) என்பவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.
இதேவேளை, பாடசாலையின் சிற்றூழியரான மார்க்கண்டு அகிலன் (வயது 30) என்பவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறையில் பாரிய விபத்து
(வி.ரி.சகாதேவராஜா)சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மின் தூண்களை ஏற்றிவந்த பாரிய நீண்ட கனரக வாகனம் கட்டுப்பாட்டைமீறி பாதையைவிட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. வாகனத்துள் அகப்பட்ட சாரதி நடாத்துனரை மீட்க பொலிசாரும் பொதுமக்களும் பாடுபடுவதையும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதையும் படங்களில் காணலாம்.
உன்னிச்சை புல்லுமலை போக்குவரத்து பஸ் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை.
(மா.சசி)
இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்புச் சாலையினால் மட்டக்களப்பு உன்னிச்சை மற்றும் மட்டக்களப்பு புல்லுமலைக் கான பஸ் போக்குவரத்துக் கட்டணத்தை சாலை முகாமையாளர் தன்னிச்சையாக அனுமதியின்றி ஊயர்த்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் தெரிவித்தார்.
புpன்தங்கிய பிரதேசமான உன்னிச்சை மற்றும் பல்லுமலைப் பகுதியில் வாழும் மக்கள் யுத்ததடதினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்பகுதிக்கான பஸ் கட்டணத்தையும் அதிகரிக்காத நிலையில் இக் கஸ்ரப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிக்குச் செல்லும் மக்களுக்கு மட்டும் தன்னிச்சையாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் எந்தவித அனுமதியினையும் பெறாமல் மட்டக்களப்புச் சாலை முகாமையாளர் கட்டணத்தை அதிகரித்திருந்தார்.
இதற்கெதிராக பொதுமக்கள் கிழக்குப் பிராந்திய சாலை முகாமையாளருக்க முறைப்பாடு செய்ததுடன் அயித்தியமலைப் பொலிஸிலும் ஆறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் தான் 18 ஆம் திகதி சென்று விசாரணை நடாத்தியதாகவும் உடனடியாக வழமையான பஸ் கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட்டதை தொடாத்ந்து பழைய கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் எந்த அனுமதியுமின்றி தன்னிச்சையாக பஸ் கட்டணம் அதிகரித்தமை விசாரணையினுடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவருக்கெதிராக குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொழும்பு தலைமை பணிமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தலைமை பணிமனை என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கேற்பவே மட்டக்களப்பு சாலை முகாமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



.jpg)











.gif)


