Tuesday, February 28, 2012

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ குடைசாய்ந்ததில் 4 பேர் படுகாயம்

அம்பாறை மாவட்ட நிருபர்

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதி மீனோடைக்கட்டு பிரதேச வீதி வளைவில் இன்று (28) முச்சக்கரவண்டி (ஆட்டோ) ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்த வீதிவிபத்தில் அதில் பயணம் செய்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
நிந்தவூரிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சம்பவதினமான திங்கட்கிழமை காலை 8.45 மணியளவில் வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வீதிவளைவில் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் வீதியைவிட்டு விலகி வீதிவபத்துக்குள்ளானது இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப்ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
இதேவேளை ஆட்டோ சாரதி காயங்கள் எதுவுமின்றி தப்பித்துள்ளதுடன், முச்சக்கர வண்டி கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



--
Read more

சிசிலியா பெண்கள் தேசிய பெண்கள் பாடசாலையின் பெற்றோர் தின விழா

கிருஸ்ணா & deepa

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பெண்கள் பாடசாலையின் பெற்றோர் தின விழாவும் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும்   செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

Read more

மட்டக்களப்பு படுவான்கரை வெல்லாவெளியில் யானை மர்ம மரணம்

(பிரணி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி
பிரதேச செயலாளர் பிரிவின் விவேகானந்தபுரம் கிராமத்தில் காட்டு யானை ஒன்று
மர்மமான முறையில் கடந்த 26.02.2012 அன்று இறந்துள்ளது.
Read more

போரதீவுப்பற்று மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் பயன்தரும் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

(பிரணி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து
மீளக்குடியமர்த்தப்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்தின் களுமுந்தன்வெளி மற்றும் இளைஞர்விவசாயத்திட்டம் ஆகிய பழம் பெரும் தமிழ் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வேண்டி மின்கம்பங்கள் நடுவதற்காக பல நூற்றுக் கணக்கான பயன்தரும் தேக்கு, பனை வேம்பு, முதிரை, போன்ற மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.



--
Read more

கிராமப்புறங்களை மையப்படுத்தி வாராந்த சந்தை நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ள்ளது.

(பிரணி)

கிராமப்புறங்களை மையப்படுத்தி வாராந்த சந்தை நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியான தும்பங்கேணி, இளைஞர்
விவசாயத்திட்டம், 40ஆம்கிராமம், 39ஆம்கிராhம், கற்சேனை, விடுதிக்கல்,
பனிச்சயடிமுன்மாரி, மாவடிமுன்மாரி, திக்கோடை, காந்தியுரம், சுரவணைடியூற்று ஆகிய
எல்லையோரக் கிராமங்களை மையப் படுத்தி நேற்று (27.02.2012) களுமுந்தன்வெளி
கிராமத்தில் பொதுவான வாராந்த சந்தை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மக்கள் பன்நெடுங் காலமாக கல்முனை, காத்தான்குடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, போன்ற பல மைல் தூரங்களுக்கு அப்பாலுள்ள பிரதேசங்களுக்குச் சென்றுதான் தமது அத்தியாவசியப் பொருட்களை கொள்வளவு செய்து வருகின்றார்கள்.
இவ்வாராந்த சந்தை இங்கு அமைக்கப் படுவதனால் இப்பிரதேசத்தினைச் சேர்ந்தசுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடைவார்கள் எனவும் இவ்வாராந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிளைமைகளில் கூடவுள்ளதாகவும் களுமுந்தன்வெளி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெ.சவுந்தரராசா தெரிவித்தார்.




--
Read more

குருமண்வெளி றொபின் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கேட் சுற்றுப்போட்டி

கோ.ரவிக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி குருமண்வெளி றொபின் விளையாட்டுக்கழகம் நடார்த்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கேட் சுற்றுப்போட்டி தொடர் எதிர்வரும் 2012 மார்ச் மாதம் 3 ஆம் 4 ஆம் 7 ஆம் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கிறது.

இடம். குருமண்வெளி றொபின் விளையாட்டுக்கழக மைதானம்.
தகவல். குருமண்வெளி றொபின் விளையாட்டுக்கழகம்.
 --
Read more

மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

லோகதக்சன்

மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு நிகழ்வு திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் ஆ.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
Read more

மண்டூரில் நடைபெற்ற பொங்கல் விழா & நாடக நிகழ்வு

லோகதக்சன்

மட்டக்களப்பு மண்டூர் காட்டுவாசலில் பராசக்தி, அன்னை திரேசா, மாணிக்கி தாய்மார் பள்ளியினர் நடாத்திய பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Read more

பாடசாலைக்கான காணி கொள்வனவு தொடர்பான நிதி கோரிக்கை

அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் ஒரு சிறிய காணிப்பகுதியில் பல்வேறு கஸ்டங்கள் மத்தியில் ஏழை மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர் இவ்பாடசாலையில் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஒரு சிறு நிலம் கூட இல்லாமல் கஸ்ரப்படுகின்றனர். இந்த நிலையில் இப்பாடசாலையிற்கு அருகில் தனியார் ஒருவரின் ஓரு சிறிய நிலப்பரப்பை விற்பதற்கு அவர்கள் உள்ளதனால் இவ் நிலப்பரப்பை பாடசாலைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள போதும் அதற்கான பெறுமதியாக 6 இலட்சம் ரூபா கோருகின்றனர்.
இதற்கான நிதி பாடசாலையில் இல்லாத நிலையும் இப்பிரதேச மக்களின் ஏழ்மையினால் பாடசாலைக்கு பெற்றோர்களால் நிதிகள் எதுவும் வழங்கமுடியாது சூழ்நிலையில் உள்ளனர் எனவே இப்பாடசாலைக்கு அருகில் உள்ள நிலப்பரப்பை வாங்குவதற்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு ஏழை மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்
மேலதிக தொடர்புகளுக்கு படசாலை அதிபர் திருமதி லீலா பேரின்பராசா தொலைபேசி எண் 0772042711 அல்லது பாடசாலை அபிவிருத்தி சபையின் உறுப்பினர் க.சரவணன் (நிருபர்) 0713565678 எனும் தொலைபேசிவாயிலாக தொடர்பு கொள்ளவும்
மக்கள்வங்கி
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று
 கணக்கு இலக்கம் 063200210018206
--
Read more

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

சிவரூபன் (கல்முனை )
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் வ.பிரபாகரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
Read more

கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயதின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி


Uthayakanth
மட்டக்களப்பு  கல்லடி முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயதின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வானது
வித்தியாலயத்தின் அதிபர், பழைய மாணவர் சங்க தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவருமாகிய
Read more

Monday, February 27, 2012

சரஸ்வதிசிலை மீண்டும் அதே இடத்தில் மாணவர்களினால் வைக்கப்பட்டுள்ளது.

கிருஸ்ணா & பிரணி

இன,மதத்துக்கு அப்பால் கல்வி அன்னையாக மாணவர்கள் அனைவராலும் கருதப்படும் சரஸ்வதி தாயை களஞ்சிய அறையில் வைத்து பூட்ட அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
Read more

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

பே .சபேஷ்
ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் ; கலந்துகொண்டனர்.
Read more

மட்டக்களப்பில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் ,கடவுச் சீட்டு, ஆவணங்களை செய்பவர் கைது

அம்பாறை மாவட்ட நிருபர் ;

மட்டக்களப்பு ஒ ட்டமாவடி பிரதேசத்தில் நீண்டநாட்களாக போலி சாரதி
அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச் சீட்டு, போன்ற ஆவணங்களை செய்து கொடுக்கும்
மினிக்கச்சேரி ஒன்றை இன்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை
கைதுசெய்துள்ளதுடன் பல போலி ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த போலி சாரதி
அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுத்த கல்முனை, அக்கரைப்பற்று இலங்கை
Read more

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி


காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழாவையொட்டி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது உணவு போசாக்கு அமைச்சர் பி.தயாரத்னா கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எ.தௌபீக் அமைச்சரின் இணைப்பாளர்
Read more

கிழக்கில் கண்டன ஆர்பாட்டங்களும் பேரணிகளும் !

பே.சபேஷ்
ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்திலும் கண்டன ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.
ஆளும் கட்சியில் அங்கம்வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்ங்களும் பேரணிகளும் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களிலே பரவலாக நடைபெற்றன.
Read more

இனங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துமுகமாக இடம்பெற்ற நிகழ்வு

(கிருஸ்ணா)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளம் உள்ளங்களுக்கான ஆன்மீகசுகம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் ஆன்மீக நடவடிக்கைகளை மேம்படுத்தும்; செயற் திட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

Read more

அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்


மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடே கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 24.02.2012  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஏற்படுத்தியிருந்தார்.

இதிலே குறிப்பிட்ட ஒன்பது பாடசாலை தேர்ந்தெடுக்கப்பட்டு அப் பாடசாலைகளின் பரீட்சை அடைவு மட்டங்கள் தொடர்பாக ஓர் விளக்க உரை நிகழ்த்தப்பட்டது.
குறிப்பாக 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ,க.பொ.த.சாதாரணதர பரீட்சை மற்றும் க.பொ.த.உயர்தர பரீடசை ஆகியவற்றின் இறுதி 3வருட பெறுNபுறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு எதிர் காலத்தில் அடைவு மட்டங்களை கூட்டுவது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

 குறிப்பாக முதலமைச்சர் சார்பில் குறித்த 9பாடசாலைகளினது பரீட்சைப் பெறுபேறுகளை உள்ளடக்கி ஓர் பகுப்பாய்வு செய்யப்பட்டு அது தொடாபிலான முழுமையான விளக்கம் முதலமைச்சரினால் வழங்கப்பட்டது.
இவ்வாறாக தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளாக மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், நாவற்குடா தருமரெட்ணம் வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் விநாயகர் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம், கல்லடி வேலூர் ஸ்ரீ கச்தி வித்தியாலயம், கல்லடி உப்போடை வவேகானந்தா மகளிர் வித்தியாலயம், கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயம் என்பனவாகும்.

இவ் விசேட  கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், பிரதிக் கல்வி பணிப்பாளர் க.சத்தியநாதன், கோட்டக்கல்வி அதிகரி டேவிட், கல்வி அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரி , கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கன்,பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாதர் அபிவிருத்தி சஙக உறுப்பினர்களும் கலந்த கொண்டு தங்களது கருத்துக்களையும் தெரிவித்தார்கள்





--
Read more

டோஹோவில் நிர்கதியான 209 பேரில் ஐந்தாம் கட்டமாக 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

பே.சபேஷ்
சட்டவிரோத ஆட்கடத்தல் பயண முகவர்களினால் கனடாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டு மேற்கு ஆபிரிக்க நாடான டோஹோவில் நிர்கதியான வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 209 பேரில் ஐந்தாம் கட்டமாக 30 பேர் கடந்த வெள்ளிக் கிழமை சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே நான்கு கட்டங்களில் நான்கு கட்ங்களில் 94 பேர் நாடு திரும்பியிருந்த நிலையில் நாடு திரும்பியோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
சட்ட விரோத பயண முகவர்களினால் அழைத்துச் செல்லப்பட்ட 19 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட 209 பேர் அந்நாட்டில் முன்று தொடக்கம் 14 மாதங்கள்வரை விசா இன்றி தங்கவைக்கப்பட்டிருந்த வேளை அந்நாட்டு இராணுவத்தினரால் சுற்றிவழைக்கபட்டு இராணுவ மைதானமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் இவர்களில் பயண முகவரின் உதவியாளர்கள் நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த முகாமில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பராமரிக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படுகிறது.
ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றம் சர்வதேச புலம் பெயரந்தவர்களுக்கான அமைப்பு ஆகியன இவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்தவர்களே தற்போது நாடு திரும்புகிறார்கள்.
குறித்த ஆட்களை கனடாவிற்கென சட்டவிரோதமாக அனுப்பிவைத்த பிரதான சந்தேக நபரென கூறபப்டும் அருணகிரிநாதன் ஜெயரூபன் குற்றப்புலனாய்வுத்துறையினால் கடந்தவாரம் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவு பெறபப்ட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது;
--
Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான கலந்துரையாடல்

by.f.m.farhan
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான கலந்துரையாடல் மட்ஃமாநகர சபை கேட்போர் கூடத்தில் முன்பள்ளி பணிமனையின் தவிசாளர் நடராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு; நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தொடர்பில் மீள் பரிசீலணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணிமனை பணிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




--
Read more

Sunday, February 26, 2012

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கடற்கரைப்பகுதியில் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப்பகுதியில் கடலில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் களுவாஞ்சிகுடி சக்தி இல்லம் வீதியின் முடிவில் உள்ள கடற்கரையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
Read more

பணி மாற்றமாகி செல்லும் அருட்பணி j .a .g ரெட்ணகுமார் அடிகளுக்கு பிரியாவிடை நிகழ்வு.

வ.சுரேஷ்கண்ணா.
மட்/புளியந்தீவு தூய மரியாள் இணைப்பேராலயத்தில் கடந்த 6
வருடங்களாக பங்குத்தந்தையாக பணியாற்றி வீச்சுகல்முனை
Read more

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி - 2012

Siva -
கல்முனை கல்வி வலயத்திற்கு உற்பட்ட உவெஸ்லி உயர்தர பாடசாலையில்
27/02/2012 திகதி அன்றும் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில்
29/02/2012 திகதி அன்றும் பாடசாலைகளின் இல்ல விளையாட்டு போட்டிகள்
நடைபெறவுள்ளன.
கிஷோ -

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி - 2012

காலம் - 2012.02.27
நேரம் -   பி.ப 2.31 மணிக்கு
இடம் - கல்லூரி மைதானம்



தலைமை வே.பிரபாகரன் ( கல்லூரி அதிபர் )

பிரதம அதிதி மாண்புமிகு பி.தயாரத்ன (சிரேஷ்ட அமைச்சர் )

கௌரவ அதிதிகள்
M.T.A. தௌபீக் ( வலயகல்வி  பணிப்பாளர் கல்முனை )
K.லவநாதன் ( பிரதேச செயலாளர் கல்முனை தமிழ் பிரிவு )

விசேட அதிதிகள்
K.தயாசீலன்
Dr. N.ஸ்டான்லி ஜெயராஜ்
Mrs. தேவகருணா காந்திநாதன்

ஏனைய விசேட அதிதிகளாக
கல்முனை வலய பாடசாலை அதிபர்கள்,
முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரும்.

அனைவரையும் அழைக்கின்றோம்.
- மாணவர்கள்

For More Informatin
Visit http://wesleyhighschool.blogspot.com/


கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் 2012ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நாளை மதியம் 2.30 (GMT+5.30) க்கு பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 
இதற்க்கான பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நாளை காலை 9மணி முதல் ஆரம்பமாகின்றன. இவற்றின் நேரடி வர்ணணை முதல் முறையாக ஒரு இணைய வானொலியில். கிழக்கிலங்கையின் கல்முனைப் பெருநகரில் இருந்து உலகெங்கும் ஒலிக்கும் "Rhythm FM" இல் நாளை காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் "காலை கதம்பம்" நிகழ்ச்சியில்
கேட்கலாம். உலகெங்கும் பரந்து வாழும் எமது பாடசாலையின் சொந்தங்கள் இணைந்து கொள்ள தரிசியுங்கள்


Read more

வவுணதீவு பொலிசாரின் ஏற்பாட்டில் நாவற்காட்டில் பொலிஸ் நடமாடும் சேவை.




கிருஸ்ணா & (பிரணி)

வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சனிக்கிழமை பொலிஸ் நடமாடும் சேவை நடைபெற்றது.
Read more

சரஸ்வதி சிலை விவகாரம் முற்று முழுதான ஒரு அரசியல் நடவடிக்கையே ! டெரன்ஸ் அடிகளார்

கிருஸ்ணா

மட்டக்களப்பு புனித வின்சனட் மகளீர் பாடசாலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சரஸ்வதி சிலை விவகாரம் முற்று முழுதான ஒரு அரசியல் நடவடிக்கையே என்று மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் அருட் போதகர் அருட் திரு டெரன்ஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Read more

இல்ல விளையாட்டு போட்டி Special Updates Click here Click here

X