கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி!

உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற இந்த விபத்து குறித்து உஹன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் உஹன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் உஹன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்