அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமல சூரிய அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக நகரிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபையின் அநுராதபுரம் பிராந்திய அலுவலக சுற்றிவளைப்பு அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது ஆறு வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் காணப்பட்ட காலவதியான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருந்துவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதனை அடுத்து நுகர்வோர் அதிகாரசபையின் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக அநுராதபுர நீதிமன்றத்தில் ஆறு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் போது தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஆறு வைத்தியசாலை களுக்கும் ஆறு இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அநுராதபுரம் இலக்கம் இரண்டு நீதிமன்ற நீதிவான் அவர்களினால் உத்தரவிடப்பட்டுள்ளது.



.jpg)










.jpg)