தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்தில் தீப்பரவல்


தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
 
வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 20 க்கும் அதிகமானோர் அதில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்சமயம் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.