.jpg)
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்களைப் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வீதி ஒன்றின் பெயர்ப்பலகையை திரைநீக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம், கன்னியா பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கட்டட பணிகள் தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி ஒரு தொல்லியல் தளமாகும். அது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அதன் பிரகாரம், அங்குள்ள தொல்பொருட்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அங்கு புதிதாக எந்தக் கட்டுமானங்களையும் அமைப்பது எமது நோக்கம் அல்ல என தெரிவித்தார்.









.jpg)



