நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - சபாநாயகர் தெரிவிப்பு


நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறு கையளிக்கப்பட்டால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.