முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வணிக நிறுவனங்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன என்றும், தற்போதைய அரசாங்கத் தலைவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக சுங்க மதிப்பீட்டு குறைபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது மட்டும் சில தொழில்முனைவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான தெரிவுசெய்யப்பட்ட சட்ட அமலாக்கம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்து, தொழில்முனைவோரை ஊக்கமின்மைக்கு உள்ளாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
House of Fashions நிறுவன உரிமையாளர், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சுங்க மதிப்பீட்டை குறைத்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.










.jpg)



